Monday, August 21, 2023

மனிதன் பேராசைக்காரன்.

எறும்புதின்னி இருக்கிறதே அது ஒரு எறும்பு புற்றுக்குப் போனால், எல்லா எறும்புகளையும் தின்று விடாது. எறும்புகள் தன்னை ஏறி கடிக்கும் வரையில் தின்று விட்டு பின் அடுத்த புற்றை நோக்கிப் போய்விடும்.

அப்படியேதான் எல்லாப் புற்றிலும் செய்யும். காரணம், எறும்புக்கடிக்குப் பயந்து அல்ல. எல்லா எறும்புகளையும் தின்று அழித்து விட்டால், மீண்டும் அங்கே எறும்புகள் பெருகுவது தடைப்பட்டுப் போய்விடும். பின்னர் அதற்கு உணவு கிடைப்பது அரிதாகி விடும்.

ஒட்டகச்சிவிங்கியும் அப்படித்தான். ஒரு மரத்திலேயே நிறைய கிடைக்கிறதே என்று மரத்தை மொட்டையடித்து விடாது. மரம் ஒளிச்சேர்க்கை செய்து தழைக்க வழி செய்ய, ஒவ்வொரு மரத்திலும் கொஞ்சம் கொஞ்சமாகவே இலைகளைக் கபளீகரம் செய்யும்.

ஆனால், மனிதன்...?