Monday, January 19, 2015

காற்றை செயற்கையாக உருவாக்க முடியுமா ?


 

நண்பர் ஒருவரின் கேள்விக்கு விடையளித்தபோது.....

கேள்வி: காற்றை செயற்கையாக உருவாக்க முடியுமா ?

பதில்: முடியாது... அனைத்து வாயுக்களும் சேர்ந்ததுதான் காற்று என்பது அறிவீர்கள்.

சரி, இரண்டு ஹைட்ரஜனும் ஒரு ஆக்ஸிஜனும் சேர்ந்ததுதான் தண்ணீர் என்று தெரியும்... காற்றில் இரண்டு வாயுக்களுமே இருக்கின்றது... ஆனால் அவற்றைக் கொண்டு நம்மால் தண்ணீர் உருவாக்க முடியுமா...?

இதற்குப் பதில் தேடினால்.... இயற்கை நமக்கு எத்தனை விதத்தில் உதவி செய்துள்ளது... ஆனால் அதனை நாம் கெடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்று உணர முடியும்....

H2O இதுதான் நாம் பொதுவாக தண்ணீருக்கு பயன்படுத்தும் குறியீடு. ஆனால், போகிற போக்கில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களையும் ஒரு ஆக்ஸிஜன் அணுக்களையும் சேர்த்து தண்ணீரை உருவாக்கி விட முடியாது. ஏனெனில் முதலில் ஹைட்ரஜன் அணு தனித்துக் கிடைப்பதில்லை. ஆக்ஸிஜன் அணுவும் ஒற்றையாக இருப்பதில்லை (இது குறித்து தனியே சொல்கிறேன்.) இரட்டையாகத்தான் O2 எனக் கிடைக்கும்.

சரி அப்படியே இரண்டும் கிடைத்து விட்டாலும் அவைகள் நிலையான எண்ணிக்கையில் எலக்ட்ரான்களைக் கொண்டவைகளாக இருக்கும். அதாவது ஆங்கிலத்தில் Saturated Level என்பார்கள். அப்படி இருக்கும் அணுக்கள் எளிதில் எதனுடனும் வினைபுரியாது. (எடுத்துக்காட்டு தங்கத்தின் அணுக்கள்)

அப்படி அவற்றை ஒன்றிணைக்க அபரிதமான சக்தி தேவைப்படும். அப்படியே ஒன்றிணைத்தாலும் தண்ணீர் உற்பத்தியாவதோடு.. அபரிதமான சக்தியும் வெளிப்படும். காரணம் அணுக்கரு இணைவு (Nuclear Fusion). சமன்பாட்டைப் பாருங்கள்..

2H2 + O2 → 2H2O + சக்தி


சமன்பாட்டில் இருக்கின்றதை இது வரை எவரும் நிகழ்வில் கொண்டு வந்ததில்லை.

ஆனால் பாருங்கள்... இயற்கை... நம்மைக் கஷ்டப்படுத்தாமல்.. பூமியிலேயே எவ்வளவு தண்ணீரைத் தந்துள்ளது. நிலத்தடியில் நீர் குறைந்தால்... கடல் நீரானது மழையாகப் பெய்து திரும்பவும் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்கின்றது...

ஒரு சுத்திகரிப்பே நிகழ்கின்றது... அதனையும் நாம் மரங்களை வெட்டி இடையூறு செய்கின்றோம்.. நஷ்டம் நமக்குத்தான்.

அதுவும் இல்லாவிட்டால், துருவங்களில் இருக்கும் பனிக்கட்டிகள் எல்லாம் நல்ல நீரே. திறமையிருந்தால் அத்தனையையும் எடுத்துக்கொள்ளலாம். துருவ ஆராய்ச்சியாளர்கள் அப்பனிக்கட்டியை உருக்கிதான் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்வார்கள்.

தண்ணீரை உருவாக்குகிறோம் என்று நம்மை நாமே அழித்துக்கொள்ளக்கூடாது என்றுதான் இயற்கையே நமக்கு தண்ணீரை வேண்டியதற்கும் அதிகமான அளவில் தந்துள்ளது. அதனையும் கெடுத்து, அணுச்சேர்க்கை, அணுப்பிளவு என்று எது நடக்கக்கூடாதோ அதனையும் முயற்சிக்கும் மனிதனின் அறிவை என்னவென்பது...?


கேள்வி: வேற்று கிரகத்தில் காற்று இருக்கிறதா என்று கண்டு பிடிக்காமல் தண்ணீர் இருக்கா என்று ஏன் ஆராய்ச்சி செய்கிறார்கள்!?

பதில்: ஓ... அப்படி வருகின்றீர்களா... பொதுவாக நம் சூரியக் குடும்பத்தில் இருக்கும் கோள்கள் அனைத்திலும் வளிமண்டலம் உண்டு. உங்களுக்கு ஒன்று தெரியுமா... செவ்வாய் வரைக்கும் உள்ள கோள்களில் தரை உண்டு. அதற்கப்புறம் உள்ள கோள்களை வாயுக்கோளங்கள் என்றுதான் சொல்வார்கள்.

காரணம் அவைகள் இன்னும் இறுகி கெட்டிப்படவில்லை அல்லது அவற்றின் தரையை நம்மால் இன்னும் காண முடியவில்லை.

அப்படி மற்ற கோள்களில் உள்ள வளி மண்டலத்தில் வாயுக்களின் விகிதாச்சாரங்களை ஏதேனும் செய்து சமன் செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்குண்டு. ஆனால் தண்ணீரை உருவாக்கிடத்தான் நம்மிடம் வழியில்லை.

உதாரணமாக, செவ்வாய்க்கிரகத்தில் கார்பன்டையாக்சைடு 95.32 சதவீதம் உள்ளதாகக் கணக்கிட்டுள்ளார்கள். அங்கு நாம் உயிர்வாழ வேண்டுமென்றால் நமக்கு ஆக்ஸிஜன் வேண்டும். அதனை உருவாக்கிக்கொள்ளலாம். எப்படி?

தண்ணீர் மட்டும் இருக்குமேயாயின், இங்கு நம் பூமியில் இருந்து கடற்பாசிகளைக் கொண்டு அங்கு போட்டுவிட்டால் போதும், அவைப் பல்கிப் பெருகி, செவ்வாயின் வளிமண்டலத்தில் உள்ள கரியமிலவாயுவை உட்கொண்டு உயிர்வளியை வெளியிட்டு... வளிமண்டலத்தில் உயிர்வளியின் விகிதத்தை அதிகரிக்கச் செய்துவிடும். அப்படி ஒரு செயல்திட்டம் ஏட்டளவில் உள்ளது.


கேள்வி: ஆக்சிஜன் மட்டும் இருந்தா உயிர் வாழமுடியுமா!? நாம் சுவாசிக்கும் காற்றில் ஆக்சிஜன் மட்டுமா இருக்கு!

பதில்: அதான் சொன்னேனே... சுத்தமான ஆக்ஸிஜனை நம்மால் அதிக நேரம் சுவாசிக்க முடியாது. ஏனெனில் நமது நுரையீரலின் பணி அப்படி. அப்படியே சுத்தமான ஆக்ஸிஜனைத் தொடர்ந்து சுவாசித்தால் மரணம் நிச்சயம்.

21% ஆக்ஸிஜனோடு மற்ற வாயுக்களும் இருந்தால்தான் நம் நிம்மதியாக சுவாசிக்க முடியும்.



கேள்வி: 21% ஆக்ஸிஜனோடு மற்ற வாயுக்களும் இருந்தால்தான் நம் நிம்மதியாக சுவாசிக்க முடியும்///வேற்று கிரகத்தில் எப்படி மற்ற வாயுக்களை உருவாகுவது!!

பதில்: எல்லா வாயுக்களும் கலந்துதான் இருக்கும்... விகிதங்கள்தான் வேறுபட்டிருக்கும். மிகமிகக்குறைந்த அளவாக இருப்பின்... சற்றுக் கடினம்தான்.

வளிச்சூழலின் தன்மையைப் பொறுத்துதான் முடிவு செய்யவேண்டும். மற்ற வாயுக்களை உருவாக்குவதா.. இல்லை வேறொரு இடத்தைத் தேடுவதா என்று....

அப்படி நாம் வாழும் சூழலுக்கு ஒரு கோளை மாற்றுவதை ஆங்கிலத்தில் Terra Forming என்பர்.


கேள்வி: Terra Forming செய்வதால் வேறு adverse reaction ஏதும் ஏற்படாதா??

பதில்: அருமையான கேள்வி. புவி வரலாற்றைப் பார்க்கும்பொழுது இதுவரைக்கும் பொதுவாக உயிரினங்கள் அனைத்தும், சூழலுக்குத் தகுந்த மாதிரி தம்மைத்தான் மாற்றிக்கொண்டு வந்துள்ளனவே தவிர, எந்தவொரு உயிரினமும் புவியை மாற்ற நினைத்ததில்லை.

மனிதன் மட்டும்தான் தன் வசதிக்காக சூழலை மாற்ற நினைக்கின்றான். இது ஒரு விதத்தில் தன்னுடைய சக்தியைக் காட்டும் முயற்சி என்றாலும், இயற்கையைப் பாதிக்கத்தான் செய்யும்.

ஏனெனில் மனித அறிவு முழுமையான ஒன்று அல்ல. இப்பொழுது செய்யும் ஒரு மாற்றம் உடனடியான பின்விளைவுகளை ஏற்படுத்தாவிட்டாலும், காலப்போக்கில் நிச்சயம் ஒரு மாறுதலை ஏற்படுத்தத்தான் செய்யும்.

அதனை முன்கூட்டியே எதிர்பார்க்கும் திறன் நம்மிடம் குறைவு. ஒரு சிறிய எடுத்துக்காட்டு, இரசாயன உரம்.

No comments:

Post a Comment